TNPSC Group1 : விண்ணப்பப் படிவங்களை திருத்தலாம், எப்படி?

டிரெண்டிங்

குரூப் 1 விண்ணப்ப படிவங்கள் திருத்தம் செய்ய 27.08.2022 -ம் தேதி முதல் 29.08.2022 இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 7 ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கு

www.tnpsc.gov.in /

www.tnpscexams.in/

என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

tnpsc group 1 latest update

கடந்த மாதம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் நாளையுடன் (22.08.2022) சேவை நிறுத்தப்படும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 27-ஆம் முதல் 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை tnpsc group 1 விண்ணப்பங்களில் திருத்தம் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வானது 30.10.2022 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடைபெறும்.

  • க.சீனிவாசன்

வேலைவாய்ப்பு : ரூ.1,38,500 ஊதியத்தில் பணி… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *