புதிய ரேஷன் கடை கட்டக்கோரி உண்ணாவிரதம்!

தமிழகம்

நாகை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டக்கோரி வாய்மேடு அருகே பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

நாகை மாவட்டம், வாய்பேடை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் சத்யகலா செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கட்டடம் கட்ட தேவையான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு சிலர் அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்ட இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய ரேஷன் கடை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்த இடத்தில் ரேஷன் கடை கட்டடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *