uசச்சின் : இந்தியா மெத்தனமாக இருக்கக்கூடாது!

public

�ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரை குறித்து மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் தெண்டுல்கர் கூறுகையில்,

**ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலியா அணி, இந்திய சூழ்நிலையில் ஆடுவது கடினம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டித் தொடருக்கு இந்திய அணி சிறப்பாக தயாராகி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும் கவனமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை கையாள வேண்டும். இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்** என்றார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியத் தொடரை கைப்பற்றுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே தயாராகி வருகின்றது. ஆஸ்திரேலிய அணியின் வியூகம் அதிகபட்சமாக ஒவ்வொரு வீரர்களின் மீதும் இருக்கும். ஒரு வீரரை வீழ்த்த பலவிதமான திட்டங்களை வகுத்து, அதனை ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். இதனால் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கடும் நெருக்கடி கொடுக்கும்என்பதால் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *