இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முரளி விஜய், ராகுல் மற்றும் புஜாரா சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளனர். மூன்றாவது நாள் போட்டியின் முடிவில் இந்திய அணி 360 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நேற்றையப் போட்டியில் நிலைத்து நின்று ஆடிய புஜாரா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 130 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் சாஹா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் செயல், இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 82 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த இந்திய அணி வீரர் முரளி விஜய், 58 ரன்கள் அடித்திருந்தபோதே கேட்ச் கொடுத்தார். ஆனால், அது காண்பதற்கு அவரது பேடில் பட்டு வந்தது போல் தெரிந்ததால் அம்பயர் நாட்-அவுட் கொடுத்தார். ஆனால், அது உண்மையில் அவுட் தான். ஆனால் அதற்கு முன்னர் இருந்த ஒரு ரெவ்யூவை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தி ரெவ்யூ வாய்ப்பினையும் இழந்ததால், அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.�,