%
வார விடுமுறை மற்றும் பணி கால வரைமுறை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, வருகிற ஜூலை 6ஆம் தேதி தமிழக காவலர்கள் குடும்பம், முதல்வரை சந்திக்கப் போகிறார்கள் என்று கடந்த ஜூன் 22ஆம் தேதி நமது மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகையில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதையடுத்து, காவல் துறையினர்களின் கோரிக்கைகளைக் கவனிக்கும் விதமாக [காவல் துறையினருக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர்](https://www.minnambalam.com/k/2017/06/24/1498242601) என்ற
தலைப்பில் இன்று ஜூன் 24ஆம் தேதி காலை 7.00 மணி செய்தியில் பதிவு செய்திருந்தோம். நாம் சொன்னது போலவே இன்று ஜூன் 24ஆம் தேதி, காலை 10.00 மணிமுதல் சிறைத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும், தமிழக அரசின் இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது தமிழகம் முழுக்க.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி. விஜயகுமார் ஐ.பி.எஸ், சப் கலெக்டர் ஜான் டான் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோர் காவலர்களுக்கு இலவச மின் விசிறி, கிரைண்டர்களை வழங்கினார்கள். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 764 சிறைக் காவலர்கள், 1564 காவலர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.�,”