dஅடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை!

public

சென்னை பாண்டி பஜாரில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து ரூ.21 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராயநகர் பகுதியிலுள்ள பாண்டி பஜார் வணிக வளாகமொன்றின் முதல் தளத்தில் என்பிஆர் என்ற வெளிநாட்டு நிறுவனமும், தரைதளத்தில் பிரின்ஸ் கோல்டு கவரிங், மும்பை மேச்சிங் சென்டர் ஆகிய கடைகளும் உள்ளன.

நேற்று (பிப்ரவரி 8) இரவு வேறொரு கடையின் மாடி வழியாக இந்த வணிக வளாகத்திலுள்ள கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, கடையில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கைகடிகாரத்தைத் திருடிச் சென்றனர். அதே மாடி வழியாக மேலே சென்றவர்கள், அருகே இருந்த குடோனில் நுழைந்து திருட முயன்றுள்ளனர். அதன்பிறகு மூன்றாவது கட்டடத்தில் தனியார் பண பரிமாற்றம் மற்றும் விமானப் பயணச் சீட்டுகள் எடுத்துக் கொடுக்கும் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பைத் துண்டித்தனர். அங்கிருந்து 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் உரிமையாளர்கள் கடையைத் திறந்தபோது பணம் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஒருவரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொள்ளையில் பங்கு கொண்டனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *