_நயன்தாராவாகிய நான்.. :அப்டேட்குமாரு

public

அந்த அம்மா போனதுக்கு அப்புறம் அரசியல்ல பெரிய வெற்றிடம் ஏற்பட்டுருக்குன்னு சொன்னாங்க. அதனால கமல், ரஜினின்னு அடுத்தடுத்து துண்டை போடுறதுக்கு ரெடியாகிட்டு இருக்காங்க, அதுக்கும் பின்னால விஜய், விஷாலுன்னு லிஸ்ட் பெருசா போய்ட்டு இருக்கு. இதுல சத்தமே இல்லாம அக்கா நயன்தாரா வொய்ல்ட் கார்டு ரவுண்டு மூலம் உள்ள வரப்போறாங்க. அறம் படத்துல கலெக்டரா நடிச்சவங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு மக்களுக்கு பணி செய்யப்போறேன்னு வெளில வந்துட்டு ‘மதிவதினியாகிய நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற..’ன்னு பேக்ரவுண்ட் வாய்ஸ் ஒழிக்க கெத்தா நடந்து வாராங்க. படத்துல அம்மா மாதிரி பச்சை கலர் சேலையில தான் வாறாங்க பார்த்தீங்களான்னு ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து ஹிண்ட் கொடுத்துட்டு போறாரு. என்னப்பா நடக்குது இங்க. நாலு படம் நடிச்சாலே நாடு ஆளுற தகுதி வந்துருமா? போற போக்கப் பார்த்தா சட்டமன்ற எலெக்‌ஷன் நடத்தாம நடிகர் சங்க எலெக்‌ஷனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கன்னு சொல்லிருவாங்க போல.

**மெத்த வீட்டான்‏**

பக்கத்து இலையை பார்க்காமல் பந்தியில சாப்பிடுவதும் ஒரு நல்ல பழக்கம்தான்…!

**Prabakar Kappikulam**

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

– நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

இதுக்குப் பேருதான் வாண்டடா வந்து வண்டியில ஏறுறது

**சிற்பன்**

தமிழகத்தில் கறுப்பு பணத்திற்கு எதிராக அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது – தமிழிசை

அக்கா , நீங்க டாக்டர் தான்.. ஒத்துகிறோம்..அதுக்காக அறுவை சிகிச்சைலாம் சொல்ல வேணாம்.

**மெத்த வீட்டான்‏**

மக்களின் வயிற்றெறிச்சல் சும்மா விடாதுன்னு நினைச்சு ஹோட்டல்களுக்கான GST வரியை குறைச்சுட்டாங்க போல…!

**அஜ்மல் அரசை‏**

தமிழகத்தில் கறுப்பு பணத்திற்கு எதிராக அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது – தமிழிசை

அப்படியே அமித்ஷா மகனுக்கும் ஒரு அறுவை சிகிச்சையை பண்ணி விடுறது

**செல்வமணி‏**

தமிழகத்தில் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது : தம்பிதுரை

மோடியை தவிர யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லிருந்தா பொருத்தமாக இருக்கும்

**சி.பி.செந்தில்குமார்‏**

நான் ஐஏஎஸ் க்கு பிரிப்பேர் பண்ணப்போறேன்…இனி FB வரமாட்டேன் அதிகமா.

அதிகமான்னா எவ்ளோ மேடம்?

இனி டெய்லி 12 மணி நேரம் மட்டும்தான் ஆன்லைன்

**Prabakar Kappikulam**

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகள் 2500 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன.

இதென்ன பிரமாதம்.. அரசாங்கத்தையே டெல்லியில அடகு வைச்சிருக்கோம்.. பெருசா பேச வந்துட்டாங்க…

**கருப்பு கருணா**

விழித்திரு

அறம்

அருவி

வரிசையாய் நல்ல படங்கள் வருது…

பொறுக்காதே..ரிலீஸ் பண்ணுங்க 2.0 வை..

**Saravanan Chandran**

ரெம்பப் பழைய கதை இது. ஜெயலலிதா கெதியாக இருந்த போது, தினமும் அதிகாலையில் அவரை எழுப்பப் பயந்து கொண்டு அவர் இருக்கும் அறைக்குள் விவேக் என்கிற சிறுபையனைத்தான் எழுப்பி விடுவதற்கு அனுப்புவார்களாம். இப்போது உட்கார்ந்து எண்ண முடியாதளவிற்குச் சொத்து சுகங்களோடு வளர்ந்து நிற்கிறார் அவர்.

நானும்கூட என் சின்ன வயதில் என்னுடைய ஆயாவை இப்படி எழுப்பி விட்டிருக்கிறேன். அதுவும் எப்போதோ போய்ச் சேர்ந்து விட்டது. சாகவாசமாக மேலே போகும்போது அதனிடம் கேட்க வேண்டும். “அந்தப் பயலோட ஆயா எம்புட்டு சொத்து சேத்துக் குடுத்துருக்கு. நீயும்தான் இருந்தீயே. இருக்கற காசையும் பிடுங்கி வெத்தலை போட்டுத் துப்புனீயே. நீயெல்லாம் மனுஷியா” என நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரிக் கேட்க வேண்டும்.

இரண்டு ஆயாக்களும் இதன் நிமித்தம் பேசுவதை ரசிக்க வேண்டும். ஆனால் அதிலொரு சிக்கல். இருவரும் ஒரே மாதிரி நரகத்தில் இருப்பார்களா? சொர்க்கத்தில் இருப்பார்களா? இருவருக்குமே பெருமாள் சாமி இஷ்ட தெய்வம்வேறு. ஆமாம் மேலே எனக்கு எந்தப் பக்கத்தில் அட்மிஷன் போடுவார்கள்?

**சி.பி.செந்தில்குமார்‏**

மக்களை துன்பத்தில் தள்ள எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை -ப.சி

# எதிர்க்கட்சியா வக்கனையா பேசுங்க,ஆளுங்கட்சியா இருக்கறப்ப கோட்டை விட்ருங்க

**SKP Karuna‏**

சங்கீஸ் புது ஐடிகளை களமிறக்கி விட்டுருக்காங்க போலிருக்கு. ஐயா! டிவிட்டர் ஐடி ஆரம்பிச்சுக் கொடுத்தீங்களே! அப்படியே லாஜிக்கா பேச மண்டையிலே ஏதாவது வச்சு அனுப்பலாம்லே? அது சரி! நீங்க என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றீங்க?

**கோழியின் கிறுக்கல்!!‏**

நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அம்மா மட்டும் திருப்தி அடையவே மாட்டார்!!

‘என்னத்த சாப்பிடுறியோ!!’

**எனக்கொரு டவுட்டு**

குஜராத் தேர்தலுக்கும் GST வரி குறைப்புக்கும் தொடர்பு இல்லை- தம்பிதுரை

நாங்க சம்பந்தம் படுத்திக்கிட்டோம்..!

**ShanRajuOffl**

வீட்டு பொறுப்ப கொஞ்ச நாள் பாத்துக்கிட்டாலே, மினி MBA படிச்ச மாதிரி தான்…

**ச ப் பா ணி‏**

ரகசியங்கள் காதுகளில் நுழைந்து

கண்களில் வெளிப்படுகிறது

**கருப்பு கருணா**

அறம் – ஒரு வரி விமர்சனம்

” டேய்…இவனுங்ககிட்ட கயித்த தவிர வேற ஒண்ணுமே இல்லடா “

**வாசுகி பாஸ்கர்**

இன்னும் கட்சியே ஆரம்பிக்காத கமலஹாசனை பற்றி திருமாவிடம் மீண்டும் மீண்டும் ஊடகங்கள் கேட்கிறது. நியாயமாக கத்துக்குட்டி கமலஹாசனிடம் போய் தான் “திருமா தலைமையில் கூட்டணி வைப்பீர்களா?” என்று கேட்க வேண்டும்.

திமுக, அதிமுக, கூட்டணி கட்சிகளை முடிவு செய்யும் மாநிலத்தின் பலம் பெற்ற கட்சிகள், அதன் தலைமையிடம் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கலாம். கமலஹாசன் இன்னும் தன் கட்சிக்கு பெயரே சூட்டவில்லை, இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியிடம், கமலஹாசனை பற்றி கேட்பதற்கு கமலின் political potential நிரூபிக்கப்பட்டதா?

“கமலஹாசன் ஒரு டம்மி, அவரை பற்றி ஏன் என் கிட்ட கேக்குறீங்க?” என்றா ஒரு கட்சியின் தலைவர் பதில் சொல்வார்? “அவர் சித்தாந்தமே என்னன்னு தெரியலை, ஒருவேளை “கமலிஸம்” என்று புதிய சித்தாந்தத்தை கூட நிறுவலாம் என்று சாடை மாடையாக இன்று திருமா நக்கலடித்திருக்கிறார்.

யாரிடமும் பரவலாக கேட்காத இந்த கேள்வியை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் திருமவிடம் வைப்பதே அயோக்கியத்தனமானது தான்.

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *