6தனுஷின் அடுத்த மூவ்!

public

தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் ‘ஹிட்டா? ஃப்ளாப்பா?’ என்ற புதிருக்கு ரசிகர்களுக்கு இதுவரையிலும் விடை கிடைக்கவில்லை. ‘மாரி’ படத்தின் வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரிட்டாக இருப்பதால் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

தனுஷுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… நார்த் மெட்ராஸின் கதைகள் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. ஹீரோயிசத்துக்கான எவ்வித அடையாளங்களும் இல்லாமல், இயல்பாக நடிக்கக்கூடிய தனுஷுக்கு நார்த் மெட்ராஸ் மொழி முதல் பாடி லேங்குவேஜ் வரை மிக சீக்கிரத்தில் பொருந்திவிடும். அந்த நம்பிக்கையில் தான் வாயை மூடி பேசவும் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் புறா கதை இருக்கு கேட்கலாமே? எனப் பேசியபோது, கதை கேட்டு ஓகே செய்தார்.

இப்போது அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க ரெடியாகிவிட்டது மாரி டீம். 2016ஆம் வருடத்தின் இறுதியில் ‘மாரி 2’ திரைப்படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன் என அறிவித்தார். இப்போது கதை முடிவடைந்து ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனில் இருக்கிறது மாரி 2 டீம். தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் ஆகிய மூவரும் தங்களது கேரக்டரிலேயே தொடர்கின்றனர். வருகிற ஆகஸ்டு மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான வெற்றி இல்லாமல் தவிக்கும் காஜல் அகர்வாலுக்கு ‘மாரி 2’ முக்கியமான படமாக இருக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *