�கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – இதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க!

public

கெட்டுப்போய்விடக் கூடாதென உணவுப்பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாத சில உணவுகளின் பட்டியல் இதோ…

**தக்காளி:** இதை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால், இதன் சுவையில் மாற்றம் ஏற்படும். அதன் தன்மையும் மாவு போன்று மாறிவிடும்.

**அவகேடோ:** காயாக இருக்கும் அவகேடோவை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. பழுத்த அல்லது ஏற்கெனவே வெட்டிய பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

**வெங்காயம்:** ஃப்ரிட்ஜிலிருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தை மென்மையாக்கி, பூஞ்சைத்தொற்றை ஏற்படுத்திவிடும். அத்துடன் ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற உணவுப் பொருள்களிலும் இதன் வாசனை பரவிவிடும்.

**பூண்டு:** இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் ரப்பர்போல மாறிவிடும்.

**பிரெட்:** ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இது சீக்கிரமே உலர்ந்துவிடும்.

**உருளைக்கிழங்கு:** ஃப்ரிட்ஜில் வைத்தால், உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச், விரைவில் சர்க்கரைச் சத்தாக மாறி, சுவையைக் கெடுத்துவிடும்.

**காபிக்கொட்டை, காபித்தூள்** இரண்டையும் ஃப்ரிட்ஜில்வைத்தால் அவற்றின் சுவை மாறக்கூடும். மேலும், ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற பொருள்களின் வாசனையை அவை உட்கிரகித்துக்கொள்ளும்.

**தேன்:** ப்ரிட்ஜில் வைத்தால், படிகங்களாக உறைந்துவிடும். எனவே, தேன் பாட்டிலை இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்தது.

**[நேற்றைய ரெசிப்பி: கப்பா மசியல்](https://www.minnambalam.com/public/2021/11/20/1/kappa-masiyal)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *