எரிபொருள் வரி குறைப்பால் பணவீக்கம் குறையும்: சக்திகாந்த தாஸ்

public

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் பணவீக்கமும் குறையும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இதுகுறித்து பேசியுள்ள பாரத ரிசர்வ் வங்கி கவர்னர், “பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்திருப்பது, குறிப்பிடத்தக்க அளவில் பணவீக்கம் (விலைவாசி) குறைவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

தற்போது உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அதே நேரத்தில் முக்கிய பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இது ஒரு கொள்கை சவால் ஆகும். முக்கிய பணவீக்க உயர்வு குறித்து நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்தியாவில் பணவீக்கம், விநியோக தரப்பு காரணிகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. இந்த விநியோக தரப்பு காரணிகளை, குறிப்பாக பயறு வகைகள், சமையல் எண்ணெய்கள் மீதானவற்றை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இவையெல்லாம் பணவீக்கம் குறைவதற்கு சாதகமாக உள்ளன. எரிபொருட்கள் மீதான பணவீக்கமும் உயர்ந்துள்ளது. அதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *