அமைப்பு சார்ந்த துறைகளில் கடந்த ஆண்டில் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பது வெறும் அரசியல் வித்தை என்றும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதிய அமைப்பின் தகவல்களின்படி, 2017 செப்டம்பர் முதல் 2018 ஏப்ரல் வரையில் 45 லட்சம் அமைப்பு சார்ந்த வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதிய அமைப்பின் தகவல்களை ஆய்வு செய்து 2017ஆம் ஆண்டில் மட்டும் 70,000 அமைப்புசார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு இ-மெயில் வழியாகப் பதிலளித்துள்ள மோடி, “வேலைவாய்ப்பு இல்லாதது போன்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. இருப்பதைப் பெரிதுபடுத்தி பேசுகின்றன. நம்மிடம் இருக்கும் தரவுகளில் வேண்டுமென்றால் தட்டுப்பாடு இருக்கலாம். மேற்கு வங்கத்தில் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் முந்தைய அரசு 53 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்கின்றனர்” என்று கூறியுள்ளார்.�,