A
கடந்த 1941ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டத்தில் பிறந்த எஸ்.கே.ராஜவேலு சென்னை கவின் கலைக் கல்லூரியில் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். 1960ஆம் ஆண்டுகளில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர். சென்னை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட லலித் கலா அகாடமியின் கண்காட்சிகளில் இடம்பெற்றன. 1963-1964ஆம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியக்கலையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.
மேலும் 1964-1965ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் ஊக்கத்தொகையைப் பெற்றவர். 1967ஆம் ஆண்டு டெல்லியில் லலித் கலா அகாடமியின் தேசிய விருதைப் பெற்றவர். அதைத் தொடர்ந்து, இவரது ஓவியங்கள் தனிநபர் கண்காட்சிக்காக 1972ஆம் ஆண்டு கொல்காத்தாவில் உள்ள பிர்லா அகாடமியில் வைக்கப்பட்டன. அதேபோல் 1975ஆம் ஆண்டும் பெங்களூருவில் இவரின் ஓவியங்கள் தனிநபர் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
கடந்த 1987ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இவரது தனிநபர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, இவருக்கு சென்னை ஓவிய நுண்கலைக் குழு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் இவர் இயற்கை எய்தினார்�,”