சென்னையில் மெட்ராஸ் ஐ” பரவத் தொடங்கியுள்ளதால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மெட்ராஸ் ஐ என்கிற கண் நோயால் சென்னையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக இந்த நோய் ஜூன், ஜூலை மாதங்களில் பரவும். ஆனால் தற்போது மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் இந்நோய் குளிர் காலத்தில் பரவி வருகிறது. இதனால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் ‘மெட்ராஸ் ஐ’க்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்தக் கண் நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களைப் பயன்படுத்துவதால் அடுத்தவருக்கும் மெட்ராஸ் ஐ பரவும். மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ இருப்பவர்கள் கண் மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும்.�,”