இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான நிலைமை நீடித்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.
ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகளின் விதிமுறைகளை மீறி வட கொரிய அரசு ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டியும் வந்தது. மேலும் அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வட கொரியா நோக்கி முன்னேறியதால் போர் பதற்றம் அதிகரித்தது.
இந்தச் சூழ்நிலையில் வட கொரிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுக்குமிடையே சுமுகமான நிலைமை இருந்தால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்துடன் சரியான நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.�,