mமாதவனை புகழ்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி

entertainment

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் வெளியிடப்பட்டது.

‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். நம்பி நாராயணன் உளவு ஊழலில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

நடிகர் மாதவன் இப்படத்தை எழுதி இயக்குவதுடன், சரிதா மாதவன், TriColour films மற்றும் Varghese Moolan Pictures க்காக வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தில் நம்பி நாராயணன் பாத்திரத்தில் கதாநாயகனாக மாதவன் நடித்துள்ளார், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், கார்த்திக் குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர், இப்படத்தில் இந்திய திரைத்துறை பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமான செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
துபாய் எக்ஸ்போ 2022-வில் இந்த “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாடுவதற்காக ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

இந்த உரையாடல் நிகழ்வின்போது, ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகரும், இயக்குநருமான ஆர்.மாதவனிடம் தன்னுடைய வாழ்க்கைக் கதையைச் சொன்ன அந்த நிகழ்வினை மீண்டும் வெளிப்படுத்தினார்.

நம்பி நாராயணன் பேசும்போது, பொறியியல் துறை சார்ந்த அறிவின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரால்தான் என் கதை சொல்லப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த வகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது.

என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில் ‘வளிமண்டல அழுத்தத்தில் சம நிலையின்மை’ என்ற பதத்தை உடனடியாக புரிந்து கொண்டார். அவரது இயல்பிலேயே உள்ளார்ந்த பகுதியாக பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

உங்களது வாழ்க்கையில் நீங்கள் உண்மையின் பாதையில்தான் செல்ல வேண்டும். ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்துபோய் விடக் கூடாது. நீதி கிடைக்கும்வரை போராட வேண்டும்…” என்றார். இப்படம் 2022 ஜூலை 1ஆம் தேதியன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

**-அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *