தங்கைக்கு தனி விமானமா? அக்‌ஷய் குமார் விளக்கம்!

entertainment

தனது சகோதரியை மும்பைக்கு அழைத்து வர தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், டெல்லியில் இருக்கும் அவரது சகோதரியையும், அவரது இரண்டு குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து வரத் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வலம் வந்தது. இது தொடர்பாக சில முன்னணி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

‘உணவுக்குக் கூட வழியின்றி மக்கள் இறப்பதும், கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என ஏராளமானவர்கள் பல கிலோமீட்டர் தூரம் சாலையில் நடந்து சொந்த ஊருக்கு செல்லும் சூழலும் நமது நாட்டில் நிலவி வரும் நிலையில் மூன்று பேருக்காக மட்டும் தனி விமானம் அனுப்புவதா?’ என்று கேட்டு நடிகர் அக்‌ஷய் குமாரை பலரும் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

ஆனால் இந்த செய்தி தவறானது என்று குறிப்பிட்டு அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

This news about me booking a charter flight for my sister and her two kids is FAKE from start to end.She has not travelled anywhere since the lockdown and she has only one child!Contemplating legal action,enough of putting up with false, concocted reports! https://t.co/iViBGW5cmE

— Akshay Kumar (@akshaykumar) May 31, 2020

அவர் வெளியிட்டுள்ள பதிவில், **“எனது சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்காக தனி விமானம் ஒன்றை நான் ஏற்பாடு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. ஏனென்றால் அவர் இந்த ஊரடங்கு காலத்தில் எங்கும் பயணம் செய்யவில்லை அத்துடன் அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. இதுபோன்ற போலி செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று அக்‌ஷய் குமார் நடித்து வெளியான ‘ஃபில்ஹால்’ இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர இருப்பதாகவும், அதற்கான நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெறவிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி ஒன்று வலம் வந்தது. இந்த செய்தியும் போலியானது என்று குறிப்பிட்டு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற போலி செய்திகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *