தெலுங்கு படத்திலிருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீக்கம் செய்யப்பட்டார்.
பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படம் ஹரி ஹர வீரமல்லு. இந்த படத்தை கிரிஷ் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகி இருந்தார். இன்னொரு நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது ஜாக்குலினை அதிரடியாக படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். மோசடி மன்னன் சுகேஷின் மோசடி வழக்கிற்குள் ஜாக்குலின் சிக்கி இருப்பதால், அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
இதனால் படப்பிடிப்பு பாதிக்கும் என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்போது அவருக்கு பதிலாக இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
**-அம்பலவாணன்**
�,