திருமணத் திட்டத்தை மாற்றிய நயன்தாரா

entertainment

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் திருப்பதியில் நடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் திட்டத்தை இப்போது மாற்றி உள்ளார்கள்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வெற்றிக்குப் பிறகு திருமணம் என முடிவு செய்துள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். அதன்படி வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
மேலும், பட வெற்றிக்கு நன்றி சொல்ல திருப்பதி கோயிலுக்குச் சென்ற ஜோடி, அங்கு திருமண ஏற்பாடுகளையும் கவனித்து வந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆனால், திருப்பதியில் அத்தனை பேருக்கு அனுமதி இல்லை என்பதால் குறித்த அதே தேதியில் சென்னை, மகாபலிபுரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடாம்.
இவர்களின் திருமண நிகழ்வை ஒளிபரப்ப பிரபல ஓடிடி நிறுவனமொன்றுக்கு அதிக விலைக்கு பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின்பே விக்னேஷ் சிவன், அஜீத்துடன் அறிவித்துள்ள படத்துக்கான வேலைகளில் பங்கேற்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது மட்டுமில்லாமல், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் விஜய் தொலைக்காட்சி, டிஸ்னி + ஹாட் ஸ்டார்க்கு விற்கப்பட்டுள்ளது. மேலும், இசை உரிமம், இந்தி சாட்டிலைட் உரிமம் என இந்தப் படத்தின் வசூல் மற்றும் வியாபாரம் ரூ.100 கோடியை எட்டியுள்ளதால் படக்குழு மொத்தமும் மகிழ்ச்சியில் உள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *