Xஐந்து புதுமுகங்கள்: Mr.சந்திரமௌலி!

public

விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கவுள்ள புதிய படம் Mr.சந்திரமௌலி. இதில் கார்த்திக்கும் அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தில் ஐந்து புதுமுக நடிகர்கள் நடிக்கவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் என இரு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஐந்து புதுமுக நடிகர்களை நடிக்கவைக்கப் போட்டி நடத்தப்பட்டது. அதில் தேர்வான ஐந்து பேர் பற்றிய விவரங்களை திரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணாமலை, ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, மிர்ரா, அம்ப்ரீஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசிக்க உள்ளனர்.

இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார்.

சமீபத்தில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. படப்பிடிப்பை நவம்பர் இறுதியில் சென்னையில் துவங்கவுள்ளனர். ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *