Wகுரூப்–2 ஏ தேர்வு தேதி அறிவிப்பு!

public

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வு இல்லாமல் நடத்தும் குரூப்–2 ஏ தேர்வுக்கு இன்று ஏப்ரல்-27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ பிரிவில் 41 துறைகளில் 1953 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தனி எழுத்தர், லோயர் டிவிஷன் கிளார்க் மற்றும் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/latest-notification.html என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *