நடிகை அஞ்சலி, தான் ஏற்கனவே நடித்த ‘கீதாஞ்சலி’யின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில், 2014ஆம் ஆண்டு நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்து வெளியான படம் ‘கீதாஞ்சலி’. ராஜ் கிரண் ஹாரர் ஜானரில் இயக்கிய இப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான வசூலைத் தந்ததோடு அஞ்சலிக்கு ‘நந்தி விருது’ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.
இந்நிலையில், இந்தப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகவுள்ளது. இதை சுப்பு வெதுலா இயக்கவுள்ளார். அமெரிக்காவில் வங்கியொன்றில் துணைத்தலைவராக இருந்த சுப்பு வெதுலா சினிமாமீது கொண்ட பற்றால் அந்த வேலையை உதறிவிட்டு ஆங்கில சுயாதீனத் திரைப்படம் ஒன்றை இயக்கினார். தற்போது கீதாஞ்சலியின் இரண்டாம் பாகத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். கோனா வெங்கட் திரைக்கதை, வசனம் எழுதி தனது கோனா ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
அஞ்சலி, அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கும் ‘லிசா’ என்ற 3டி ஹாரர் படம் மற்றும் பிரவீன் இயக்குகிற, ‘ஒ’ என்ற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் கீதாஞ்சலியின் இரண்டாம் பாகத்துக்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் மூன்று ஹாரர் படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,