சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கடையொன்றில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசம் என்ற அறிவிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளது.
சென்னை மாநகரில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இளம் ஆண்கள், பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. சமீபகாலமாக நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, சில விடுதிகளில் தங்கியிருந்தவர்களைச் சொந்த ஊருக்குச் சில நாட்கள் சென்று வருமாறு கட்டாயப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின. சென்னை மாநகரின் மையப்பகுதியில் நீருக்காகப் பல களேபரங்கள் நிகழ்ந்து வருகிற சூழலில், திருவல்லிக்கேணியிலுள்ள எல்லம்மன் மாவுக்கடை உரிமையாளர் பார்த்தசாரதியின் அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
தங்கள் கடையில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசம் என்ற அவரது அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தண்ணீர் வேண்டுமென்பவர்கள் குடம் கொண்டுவர வேண்டுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடையில் பணியாற்றுபவர்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகத் தினமும் அவதிப்படுவதாகக் கூறுவதைக் கேட்டபிறகு இந்த யோசனை தோன்றியதாகத் தெரிவித்துள்ளார் பார்த்தசாரதி. இதனால் இவரது கடையை நாடி வருபவர்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு வியாபாரம் சார்ந்ததல்ல என்றும், இது சென்னையின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை என்றும் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[போன் போட்ட தினகரன்; பேட்டி கொடுத்த பழனியப்பன்](https://minnambalam.com/k/2019/06/29/47)**
**[சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/06/29/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: ஸ்டாலின் தயக்கம்- நிஜப் பின்னணி சொன்ன எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/28/89)**
**[முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?](https://minnambalam.com/k/2019/06/28/88)**
**[இணையத்தை கலக்கும் அஜித் – யுவன் மேஜிக்!](https://minnambalam.com/k/2019/06/27/44)**
�,”