uஅனுபமா: நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…!

public

�பிரேமம் திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளுக்குமே நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. பிரேமம் திரைப்படத்திலிருந்து நேராக தமிழுக்கு வந்த மடோனா செபாஸ்டியன் ஓரளவுக்கு புகழ் பெற்றுவிட்டார். கடைசியாக தனுஷின் பவர் பாண்டி படத்தில் அவரைப் பார்த்திருந்தோம். அனுபமா பரமேஸ்வரனும் தனுஷுடன் கொடி படத்தில் நடித்துவிட்டார். இப்போது சாய் பல்லவியையும் மாரி 2 படத்தில் தனுஷ் கமிட் செய்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த நடிகைகளை கோலிவுட்டிக்குக் கொண்டுவருவதற்காக அவர் செய்தது இந்த முயற்சி.

மடோனா, கிளாமருக்கு நோ சொல்லிவிட்டதால் அவருக்கான வாய்ப்புகள் மற்றவர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்ற பேச்சு தமிழ் சினிமாவில் அடிபடுகிறது. அனுபமா பரமேஸ்வரனின் தோற்றம் ஒரு மாதிரி இருப்பதாக சில படங்களிள் அவரை வேண்டாமென்று சொல்லிவிட்டனர். இப்போது தான் சாய் பல்லவி வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துவிடும் ஆசையில் தனது லுக்கையே வேறு லெவலுக்கு மாற்றிவிட்டார் அனுபமா.

பிரேமம் திரைப்படத்தில் சுருட்டை முடி, கத்தி படாத புருவங்கள், கொஞ்சம் பருமனான உடல் என்று காட்சியளித்த அனுபமா தற்போது எல்லா வகையிலும் மாறி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு வகையான உடை, சிகை அலங்காரம், மேக்-அப் என மாற்றி மாற்று அனுபமா எடுத்த ஃபோட்டோஷூட்கள் தான் சமூக வலைதளங்களில் புயலாகப் பரவி வருகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *