மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் கார்த்தியின் முதல் காதலியாக(அவர் தான் முதல் காதலியா என்று தெரியாது. படத்தைப் பொருத்தவரையில் முதல் காதலி) கிரிஜா கபூர் என்ற கேரக்டரில் நடித்தவர் ஷ்ரதா ஸ்ரீநாத். மணிரத்னம் படத்தில் நடித்தாலும் செகெண்ட் ஹீரோயின் லெவலுக்கு ஒரு கேரக்டரில் நடிக்கவேண்டுமா? என குறைபட்டது கோலிவுட் சமூகம். ஏனென்றால், அப்போதே அவர் கையில் இவன் தந்திரன், விக்ரம் வேதா என இரு படங்கள் இருந்தன.
ஒரு படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடி. மற்றொன்றில் மாதவனுக்கு ஜோடி என்ற நிலையிலும், மணிரத்னம் படத்தில் ஏன் நடிக்கவேண்டும் என அப்போதே [ஷ்ரதா விளக்கியிருந்தார்.](https://minnambalam.com/k/1480789816)
இப்போது இவர் நடித்த இவன் தந்திரன் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி பொறியியல் மாணவர்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகள் பற்றிப்பேசக் காத்திருக்கிறது. இந்தப்படத்துக்காக தான் செய்த பயணம் பற்றியும் ஷ்ரதா ஸ்ரீநாத் பேசியிருக்கிறார். **காற்று வெளியிடை படத்தின் மூலமாக நான் உங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், நான் ஹீரோயினாக அறிமுகமாகும் திரைப்படம் இவன் தந்திரன். ஆஷா என்ற ஸ்ட்ராங்கான கேரக்டர் கொடுத்ததற்காக இயக்குநர் கண்ணனுக்கு நன்றி. நான் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தபோது எனக்குப் புரியவைத்த கௌதமுக்கு நன்றி. காற்று வெளியிடை படத்திலிருந்தே எனக்கு அறிவுரைகள் சொல்லிக்கொடுத்துவரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் நன்றி** என்று தனக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லி தனது பேச்சை முடித்துவிட்டார்.
ஆஷா என்ற பெயருடன் விரைவில் தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகப்போகிற ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி என இவர் பங்களிப்புடன் வரப்போகிற மூன்று படங்களிலும் முக்கியப்பங்கு வகிக்கும் நடிகையாக இவர் இருக்கப்போகிறார்.
�,”