�பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி பல வருடங்களுக்குப் பிறகு பிரபல Vanity Fair என்னும் பேஷன் பத்திரிகையில் தலைப்பு புகைப்படமாக இடம்பெற்றுளார். நாற்பத்து இரண்டு வயதாகும் ஏஞ்சலினா ஜோலியை வயது முதிர்ந்தவர் என்று அனைத்து பத்திரிகைகளும் ஒதுக்க, தற்போது அந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ள ஏஞ்சலினா அப்படி என்ன செய்துவிட்டார்.
நெட்ஃபிலிக்ஸ் மின் தொலைக்காட்சிக்கு கம்போடியாவை மையப்படுத்தி ஒரு படம் எடுத்து வருகிறார். கம்போடியா நகரம் ஏஞ்சலினாவுக்கு மிகவும் நெருக்கமானது. அங்கிருக்கும் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே, தனது படங்களின் ஒரு பகுதியை அங்கு படமாக்குவது ஏஞ்சலினாவின் வழக்கம். இப்போது முன்புபோல ஆக்ஷன் படங்களில் நடிக்காதபோதும், அவர்களது வாழ்வு மேம்பட உலக அரங்கில் அவர்கள் கவனம்பெற அவர்களது வாழ்க்கையை படமாக்கிவருகிறார் ஏஞ்சலினா. முன்னேறும் ஆர்வத்துடனும், அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கும் கம்போடியா மக்களின் வாழ்வியலை தனது புகழைப் பயன்படுத்தி உலகத்துக்குக் கொண்டுசெல்ல அவர் முற்பட்டிருப்பதே, தற்போது அவரை நோக்கி கேமரா கண்கள் திரும்பியிருக்கக் காரணம்.
�,”