eதிருப்புமுனையை எதிர்பார்க்கும் சிபி

public

வணிகரீதியாக ஒரு வெற்றியை எதிர்பார்த்துள்ளார் சிபிராஜ். கதாநாயகனாக அறிமுகமாகி பதினைந்து ஆண்டுகள் ஆனபோதும் சிபிராஜுக்குப் பெரிய அளவில் வெற்றிப்படங்கள் அமையவில்லை. தற்போது அவர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் நடிப்பதற்குச் சவாலாக உள்ள முக்கியத்துவம் வாய்ந்த எந்தக் கதாபாத்திரத்திலும் சிபிராஜ் நடித்துவருகிறார். இவர் தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தை கமலக்கண்ணன் இயக்கவுள்ளார். கமலக்கண்ணன் மதுபானக் கடை திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர். கதை, கதாநாயகன், கதாநாயகி என்ற எதையும் சாராமல் மதுபானக் கடை என்ற இடத்தை மையமாகக் கொண்டு அங்கு வரும் மனிதர்களைச் சுற்றி திரைக்கதை எழுதி அந்தப் படத்தை கமலக்கண்ணன் உருவாக்கியிருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். எனவே இந்தப் படம் சிபிராஜ், கமலக்கண்ணன் இருவருக்கும் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக காதல் கண்கட்டுதே, ஏமாளி ஆகிய படங்களில் நடித்த அதுல்யா ரவி நடிக்கிறார். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை தவிர ரங்கா, மாயோன், நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் அடுத்த படம் ஆகியவை இவரது கைவசம் உள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *