காங்கிரஸ் மீதான தாக்குதலை தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இணையத்தில் காங்கிரஸ் குறித்து தான் அதிகம் ஜோக்குகள் கிடைக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.
“கூகுளில் தேடிப் பார்த்தால், வேறெந்த தலைவர்களையும் விட காங்கிரஸ் தலைவர்கள் குறித்து தான் அதிகம் ஜோக்குகள் இருக்கின்றன” என வெள்ளிக் கிழமை உத்தரப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியை குறிவைத்து தாக்க தொடங்கியிருக்கும் மோடி, மார்ச் 11 ஆம் தேதி அகிலேஷ் யாதவ் அம்பலப்படுத்தப்படுவார்.மார்ச் 11 ஆம் தேதி உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
பாஜக ஊழியர்களை சிறையில் வைத்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மோடி, சட்டத்தை தங்களுக்காக சமாஜ்வாதி பயன்படுத்திக் கொள்கிறது என தெரிவித்தார். “ அரசாட்சியை இப்படி பயன்படுத்தலாமா? பாஜக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாராவது தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டத்தை தவறாக பயன்படுத்துவார்களா?” என மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.�,