)
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான ஆர்.காந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய துணை ஆளுநராக பி.பி.கனுங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
விரல் ஆச்சார்யா, என்.எஸ்.விஸ்வ்பநாதன், எஸ்.எஸ்.முந்த்ரா மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக உள்ளனர். இதில், கடந்த 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி துணை ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.காந்தியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அப்பதவிக்கு பி.பி.கனுங்கோ நியமிக்கப்படுவதாக அரசின் பணியாளர் நியமனக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதியில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பொறுப்பேற்கும் பி.பி.கனுங்கோ தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அப்பதவியில் தொடருவார். இவர், கடந்த ஆண்டில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குமுன்னர் அந்நியச் செலாவணி துறையின் நிர்வாகியாகப் பணியாற்றினார். மேலும் ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா பிராந்திய இயக்குநராகவும் இருந்துள்ளார்.�,