uகாணாமல்போன குழந்தை: ஒரேநாளில் மீட்ட போலீஸ்!

public

சென்னை பெசண்ட் நகரில் காணாமல் போன 8 மாத குழந்தையை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர். நேற்று காலை காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில் குழந்தையை இன்று (பிப்ரவரி 29) மீட்டுள்ளனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாட்ஷா(25), விக்ரவாண்டியைச் சேர்ந்தவர் சினேகா(22) இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது, இந்த தம்பதியினருக்கு ராஜேஸ்வரி என்ற 8 மாத குழந்தை உள்ளது.

பிழைப்புக்காகச் சென்னை வந்த இவர்கள் பெசண்ட் நகர் கடற்கரையில் பாசியினால் ஆன பொருட்களை விற்கும் வேலை செய்து வருகின்றனர். இரவு வேலை முடிந்ததும் கடற்கரையிலேயே படுத்து உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதுபோன்று கடந்த 27ஆம் தேதி இரவும் வேலை முடிந்து கடற்கரையிலேயே குழந்தையுடன் படுத்து உறங்கியுள்ளனர். பிப்ரவரி 28ஆம் தேதி காலை எழுந்து பார்த்த போது குழந்தை இல்லை.

கடற்கரை முழுதும் தேடியும் குழந்தை காணாததால், ராஜேஸ்வரியை யாரோ திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பாட்ஷா, சினேகா தம்பதியினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அடையாறு துணை ஆணையர் பகலவன் உத்தரவின் பேரில் போலீசார் குழந்தையைத் தீவிரமாகத் தேடினர். கடற்கரையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒரு பெண், குழந்தையை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் அந்த பெண் எடுத்துச் செல்லும் திசையில் இருக்கும் அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தினர்,

அனைத்து காவல்நிலையத்துக்கும் இதுகுறித்த புகைப்படங்களை அனுப்பியும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கே.கே.நகர் அருகே எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் குழந்தை இருந்தது தெரியவந்தது. அங்கு சென்று குழந்தையை மீட்டு,கடத்திச் சென்றவரையும் அவரைச் சார்ந்த கும்பலையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழரசன் என்பவருக்குக் குழந்தையை ரூ.2.55 லட்சத்துக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *