Oநோபல் மேடையேறிய வேட்டி-சட்டை!

public

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை கொல்கத்தாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர் சக பொருளாதார மேதை மைக்கேல் கிரம்மருடன் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி இந்திய பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டை மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டஃப்லோ சேலை அணிந்துகொண்டு மேடை ஏறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளை ஆய்வு செய்து, தனித் தனி குழுக்களாக வகைப்படுத்தி ஆய்வு செய்யும் முறைக்காக இவர்கள் மூன்று பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டன.

பரிசு வழங்கும் விழாவில் அவருடைய குடும்பத்தினர் சிலரும் அவையில் அமர்ந்து இந்த நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர். அபிஜித்தின் நெருங்கிய நண்பர் பப்பா சென் அவர்களும் வேட்டி-சட்டை அணிந்து சென்றது குறித்து, “அபிஜித் இதுபோன்ற பெரிய நிகழ்விலும் இந்திய கலாசாரத்தை உயர்த்திப்பிடித்துள்ளார். அவர் செய்த சாதனைகளுடன் இதுபோன்ற சின்னச்சின்ன செய்கைகள் தான் அவரை பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம் எனத் தெரிவித்துள்ளார்”. அபிஜித்தின் இந்த செய்கையை பலரும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *