ஹெல்த் ஹேமா

public

கிட்டப்பார்வை, தூரப்பார்வை… இவை இன்று பெரும் பிரச்னையாகி, பள்ளிக் குழந்தைகளும் கண்ணாடியுடன்தான் செல்கின்றனர். அதற்கான சில காரணங்கள்…

கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரி செய்ய நமது உடலுக்கே தெரியும். ஆனால், அதற்குத் தேவையான சில பொருள்கள் ரத்தத்தில் இல்லாமல் போவதே இதற்கு முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் ரத்தத்தில் கெட்டுப்போவது. மூன்றாவது ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது. நான்காவது கண் கெட்டுப்போய் விட்டது என்று நம் மனதும் கெட்டுப்போய் விடுவது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான காரணம் கண்ணில் கிடையாது. ரத்தத்தில்தான் எந்த மருந்தும், மாத்திரையும், ஆபரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே, நாம் புரிந்துகொள்ள வேண்டியது… கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண்களே காரணமாகாது. ரத்தம்தான் காரணம். இவற்றை சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

**கண் பார்வை குறைபாடு நீங்க…**

முருங்கைப் பூவுடன் பசும்பாலைச் சேர்த்து நன்றாக காய்ச்சி காலை, மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டுவந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும். கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப்பூ பொடியுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டுவந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாகத் தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையைத் தெளிவுபெறச் செய்யும்.

முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசும் நெய்யை நன்றாகத் தேய்த்து, அரிசி தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.

ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு மாதத்துக்கு ஒருமுறை பேதி மருந்து, மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் அலையக் கூடாது.

நாளை வெள்ளெழுத்து பிரச்னை தீர என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *