^விஜய் சேதுபதியின் அடுத்த கேரக்டர்!

public

விஜய் சேதுபதி தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை தனது தனித்துவ நடிப்பால் மெருகேற்றுவார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் அவர் புதிய படமொன்றில் இசைக் கலைஞராக நடிக்கிறார்.

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். விஜய் சேதுபதியிடம் தனது திரைக்கதையைக் கூறி தனது படத்தில் சம்மதிக்க வைத்த ரோகாந்த் அவருக்காக ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்பந்தமாகிப் பரபரப்பாக இயங்கி வரும் விஜய்சேதுபதி ரோகாந்த் இயக்கும் படத்துக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தார். ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது இந்தப் படத்தில் இணையவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்கள் யார் மற்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும் இந்தப் படத்துக்காக 150 வருடம் பழமை வாய்ந்த தேவாலயத்தை அரங்கு அமைக்க உள்ளனர். இதனால் சற்று பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தப் படம், சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினை பற்றியும் பேசவுள்ளது. மார்ச் மாதம் தொடங்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *