ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சந்தையில் மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி வந்த பெஹலுகான் என்ற 55 வயது முதியவர் பசு பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார்.
உரிய ஆவணங்களைக் காட்டியும் தங்களைத் தாக்கியதாக பெஹலுகானுடன் இருந்த அவரது மகன்களும், நண்பரும் தெரிவித்தனர். தனது பால் பண்ணையைப் பெருக்குவதற்காக மாடு வாங்கச் சென்றவர் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில், பால் பண்ணைக்காக மாடுகளை ஏற்றி வந்த முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவம் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. அவை கூடியதுமே இச்சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகளைக் கேட்க தொடங்கினர். இதுதொடர்பாக பதிலளித்துப் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர், ‘இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தைக் கைவிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் துணை சபாநாயகர் அவையை ஒருமணி நேரம் ஒத்திவைத்தார்.�,”