பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: நீதிமன்றம் தடை!

public

50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகளை வகுத்து, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று அரசாணை பிறப்பித்தது. அதன்படி சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும், இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித் துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆஃப் மேரி கல்வி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 11) நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுபான்மை பள்ளிகள் துவங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால், அந்த அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்று, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *