பனிச்சரிவுக்கு பாகிஸ்தானே காரணம்: ராணுவத்தளபதி!

public

காஷ்மீரில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுக்கு பாகிஸ்தானே காரணம் என்று ராணுவத்தளபதி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்பு பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பனிச்சரிவுகள் நிகழ பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தான் காரணம் என இந்திய ராணுவ தளபதி விபின் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் பனிச்சரிவுக்கு புவி வெப்பமயமாதல், சுற்றுசூழல் மாறுபாடு என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதே நேரத்தில் காஷ்மீர் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை நோக்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவை இங்குள்ள பனிப்பாறைகளை பிளந்து பனிப்பாளங்கள் நெகிழ்ச்சியடைய செய்கின்றன. இதன் காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கும்போது இது போன்ற பனிச்சரிவுகளை ஏற்படுத்தி விடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. ஆங்காங்கே பனிச்சரிவுகள் நிகழ்ந்து வருகிறது. மலைச்சரிவு பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவத்தினர் செய்து வருகின்றனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *