மருத்துவ நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும். அதுவும், மே 1 ம் தேதியும், ஜூலை 24ம் தேதியும் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மே, 1ம் தேதி தேர்வு நடத்தவேண்டும் என்றால் ஏப்ரல் 28ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டதால் கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, மே 1 அன்று தேர்வு நடத்த உத்தரவிட்ட தீர்ப்பை பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை மனு அளித்தது. மத்திய அரசின் மனுவை பரிசீலித்து, தேர்வு தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், தேர்வுக்குத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை மே 3ம் தேதி மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வுமூலம் மாணவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், உத்தரப்பிரதேசம், கர்நாடகா அரசுகள் அளித்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.�,
நுழைவுத்தேர்வுக்கு தடை கிடையாது: உச்சநீதிமன்றம்
+1
+1
+1
+1
+1
+1
+1