தமிழகத்தை இந்தியாவே பாராட்டுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

public

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் எடுக்கப்படும் முடிவுகளைக்கண்டு நாடே பாராட்டுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ஆம் தேதி(இன்று) தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் போன்றவை வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடப்புத்தகங்களும், சீருடைகளும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் ஜூன் 7- ஆம் தேதி(இன்று) வழங்கப்பட்டது. பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழக கல்வித்துறையில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்டு இந்தியாவே பாராட்டுகிறது. ஏனென்றால் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டுவருகின்றது. உதாரணத்திற்க்காக ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்றதை கூறலாம்.

மேலும், கல்விக்காக ரூ 26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை எளிதாக வாங்க முடியும். பொதுத்தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் இம்முறை முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு யோகா, சாலை விதிகள் போன்றவை சிறப்பு வகுப்புகள் மூலம் பள்ளிகளில் கற்றுத்தரப்படும். பாடப்புத்தகங்கள், சீருடை, கையேடு போன்ற மூன்று பொருள்களும் முதல் கட்டமாக 3 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

11-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தற்போதுதான் முதல் முறை என்பதால் மாணவர்களின் அச்சம் போக்கும் வகையில், 11-ஆம் வகுப்புக்கு மாதிரி வினாத்தாள்கள் தயாராகி வருகின்றன. நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம், என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மேலும், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *