முகநூலில் பகிரப்படும் செய்திகள்மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாகப் பரவி வருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்துக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களால் நமது லேப்டாப், மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் வைரஸ்கள் பரவுகின்றன. ஒவ்வொரு மாதமும் விதவிதமான வைரஸ்களையும், ஸ்பேம் பெசேஜ்களையும் அனுப்பி உங்கள் கணக்குகளில் உள்ள தகவல்களைத் திருடுவதை வேலையாகவே வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருமுறையும் ஒவ்வொருவிதமாக வைரஸ்களையும், ஸ்பைவேர்களையும் அனுப்புகிறார்கள். புகைப்படங்கள்மூலம் வரும் அறிவிப்புகளில் உள்ள மால்வேர் நீங்கள் பயன்படுத்தும் கணினிக்கு உடனடியாக டௌன்லோட் ஆகிறது. இதை கிளிக் செய்வதன்மூலம் வைரஸ் ஆக்டிவேட் ஆகிறது. குரோம் மட்டுமல்லாமல், எட்ஜ், பயர் பொக்ஸ், சபாரி, ஒபேரா ஆகிய ஃப்ரௌசர்களின் மூலமும் இந்த வகை வைரஸ்கள் பரவுகின்றன.
இந்த வாரம் பரவி வரும் ஸ்பைவேர் முன்னதைப்போல ஆபாசப் படங்கள் கொண்டிராமல் உங்களுக்குத் தெரிந்தவர்போல மெசேஜில் வருகிறது.
அதனால், உங்கள் வரும் நோட்டிஃபிகேஷன்களை கவனமாகக் கையாள வேண்டும். இந்தப் பிரச்னை தீர்க்கப்படும்வரை நண்பர்களிடமிருந்து நோட்டிஃபிகேஷன் வந்தால் அதை கவனமாகக் கையாள வேண்டும். அதை கிளிக் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.�,