தொழில் நகரமான கோயம்புத்தூரில் ஈச்சனாரி பகுதியில், சிட்கோவில் பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மே 7ஆம் தேதியான இன்று காலை திடீரென தீ பற்றியது. இதனால் மற்றோர் ஆலைக்கும் மளமளவென தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து பெரியளவில் நிகழ்ந்துள்ளதால், தனியார் லாரி மூலம் நீரைப் பெற்று, தீயணைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நல்லவேளையாக பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.�,