சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். கடந்தாண்டு ஜுன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அடுத்த கிழக்குதொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்தார். கோகுல்ராஜ் கொலைதொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள்முன் யுவராஜ் சரணடைந்தார். சமீபத்தில், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அவரது தாயார் சித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் வரும் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அந்தவகையில் சித்ராவின் மனுவுக்கு பதிலளித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், “இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான பாதையில் செல்வதால், சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று கூறி கோகுல்ராஜின் தாயார் சித்ராவின் மனுவை தள்ளுபடி செய்தார்.�,
கோகுல்ராஜ் கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
+1
+1
+1
+1
+1
+1
+1