?
கிழக்கு ரயில்வேயில் செய்யப்படவுள்ள கட்டண மாற்றங்கள் குறித்த அறிவிப்பை மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். ரயில்வே துறையைப் பொருத்தவரை ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக வருமானம் கொடுக்கக்கூடிய ரயில் நிலையங்கள் ஏ1 என்றும் ரூ.6 முதல் 50 கோடி வரை வருமானம் கொடுக்கக்கூடிய ரயில் நிலையங்கள் ஏ என்றும் ரூ.6 கோடிக்கும் குறைவான வருமானம் தரக்கூடியவை பி, சி உட்பட பல பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டண மாற்றத்தின்படி சுமைக் கட்டணமும் காத்திருப்புக் கட்டணமும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்களில் சுமைக் கட்டணமாக 40 கிலோவுக்கு ரூ.50-ம், பி மற்றும் சி வகை ரயில் நிலையத்துக்கு ரூ.45-ம் இதர ரயில் நிலையங்களுக்கு ரூ.40-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏ1 மற்றும் ஏ பிரிவில் 30 நிமிடத்துக்கும் மேலாக காத்திருப்பு அறையில் இருக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ரூ.50-ம், பி மற்றும் சி வகை ரயில் நிலையத்துக்கு ரூ.45-ம், இதர ரயில் நிலையங்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.�,