[காவிரி பிரச்னை: பாஜக குழு அமைப்பு!

public

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க தமிழக பாஜக சார்பில் இல.கணேசன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. மாறாகக் காவிரி மேற்பார்வை ஆணையமே அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்தப் பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க தமிழக பாஜக சார்பில் 3பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாயப் பிரிவுத் தலைவர் பொன்.விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தின் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்” என்று குறிப்பிட்டார்,�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *