அனுஷ்கா சர்மா மற்றும் ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப் ஹேரி மெட் சீஜல்’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. தணிக்கைத்துறை அதிகாரிகளால் `U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஷாருக் கான்,அனுஷ்கா சர்மா, இப்படத்தின் இயக்குநர் இம்தியாஸ் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஷாருக் கான், நிறைய காதல் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் விஷயத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன்” எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அனுஷ்கா சர்மா, “உண்மையில் ஷாருக் கானுடன் காதல் காட்சியில் நடிப்பது சுலபமானது. அவருடைய கண்களில் ஒரு வித உண்மை இருக்கும். அதை திரையில் பார்க்கும் போது அனைவரும் உணர்வீர்கள். என்னைப் பொருத்தவரை ஷாருக் கான் ஒரு மைக்ரோ போனை கூட அழகாக ரொமான்ஸ் செய்வார்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நிருபர்களைச் சந்தித்த அனுஷ்காவிடம் பத்திரிகையாளர் ஒருவர், “ஆமீர் கானிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அனுஷ்கா, “ஆமீர் கான் மிகவும் புத்திக்கூர்மையானவர். அவரது இந்தத் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சில சமயங்களில் அவர் நம்மை கவனிக்கிறாரா, இல்லையா? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நடந்து கொள்வார். இது அவரிடம் எனக்குப் பிடிக்காத விஷயம்” எனத் தெரிவித்தார்.�,”