yஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்குமா? நாளை தெரியும்!

politics

�மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தமிழக அரசு, அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், இட ஒதுக்கீட்டில் மாறுதல் செய்வது குழப்பங்களை ஏற்படுத்தும் என அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாகவும், மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பினை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை வழங்குகிறது. தீர்ப்பின் முடிவில் தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா என்பது தெளிவாகிவிடும்.

*எழில்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *