ஆபத்து மாநிலங்கள் பத்தில் தமிழ்நாடும் ஒன்று: மத்திய அரசு எச்சரிக்கை!

politics

கொரோனா தடுப்பூச்சி விநியோகத்தில் மத்திய அரசு கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில்… இன்று (ஏப்ரல் 21) காலை வரை 13 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 21) பகலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை, 19,01,413 முகாம்களில்‌ 13,01,19,310 பயனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

95-வது நாளான நேற்று (ஏப்ரல் 20, 2021), நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ள அமைச்சகம் மேலும்,

“ தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 76.32 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,097 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேரும், டெல்லியில் 28,395 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 21,57,538 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக (85.01%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று அந்த விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *