zசசிகலா ஈபிஎஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

politics

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டார். அதோடு அங்கு நடந்த கொள்ளை சம்பவம் குறித்து ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீலகிரி அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதா மரணத்திற்குப் பின் நடந்த கொலையில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது சசிகலா இளவரசிக்குத் தான் தெரியும் என்பதால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக ஷோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (நவம்பர் 12) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்கக் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையேற்று வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *