ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று இரவு (ஏப்ரல் 2) மோதின. இதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று (ஏப்ரல் 2) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இரவு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது .சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது
இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது . குஜராத் அணியில் லாக்கி பெர்குசன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று (ஏப்ரல் 3) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
**- ராஜ்**
.