இரண்டாவது நாள் ஆட்டம்: விக்கெட் இழப்பின்றி 129 ரன்களுடன் நியூசிலாந்து!

entertainment

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்க ஷுப்மான் கில் (52) மற்றும் ஜடேஜா (50) அரைசதம் அடிக்க இந்தியா 111.1 ஓவரில் 345 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜேமிசன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. டாம் லாதம், வில் யங்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் பலன் கிடைக்கவில்லை.

இதனால் இருவரும் அரை சதம் அடித்தனர். ஐந்து பந்து வீசு்சாளர்களையும் சோர்வடையச் செய்த நியூசிலாந்து தொடக்க ஜோடி விக்கெட்டை இழக்காமல் 57 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டாம் லாதம் 165 பந்தில் 50 ரன்களும், வில் யங் 180 பந்தில் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *