kநடிகைகளை பற்றி பத்திரிக்கைகள் கிசு கிசுக்கள் எழுதுவதும், விமர்சிப்பதும் ஒருபுறமிருந்தாலும் சமூகவலைதளங்கள் வந்தபின் ரசிகர்களே நடிகைகளை விமர்சித்து கமண்ட் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அவை சில நேரங்களில் எல்லை மீறி விமர்சிப்பதும் நடந்துவருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஸ்ருதி ஹாசன் தனது உதட்டை அறுவை சிகிச்சை செய்து மாற்றியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். அதனால் அதிருப்திக்குள்ளான ஸ்ருதி பத்திரிகையாளர்களிடம் எனது உடல் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். [யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை](https://minnambalam.com/k/2017/06/07/1496819032) என்று தெரிவித்திருந்தார்.
தற்போது பிரியங்கா சோப்ரா மூக்கை அழகாக்க ஆபரேஷன் செய்துகொண்டதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படமான ’பேவாட்ச்’ சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரியங்கா. இதைப் பார்த்தவர்கள், ’இப்போதும் மூக்கில் அறுவை சிகிச்சையா? பார்க்க முடியவில்லை’ என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும் பலர் கொஞ்சம் எல்லைதாண்டி சென்று அவரை கலாய்த்துள்ளனர். ஆனால், பிரியங்கா இதை கண்டுகொள்ளவில்லை.
சமூக வலைதளங்கள் நடிக, நடிகைகளுக்கும் ரசிகர்களுக்குமான ஆரோக்கியமான விவாதம் நடைபெறும் இடமாக இல்லாமல் அருவருக்கத்தக்க கமெண்டுகள் மூலம் திசைமாறுவது சரியானதல்ல.
�,”