Jஇன்று பாதிப்பு:5,928: 96 பேர் பலி!

public

mதமிழகத்தில் இன்று புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவு, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, அசாம், ஆந்திரா, ஜார்கண்ட் ஆகிய பகுதிகளிலிருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்தவர்கள் உட்பட, தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5,928 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று 73 ஆயிரத்து 155 பேருக்கு உட்பட இதுவரை 47 லட்சத்து 26 ஆயிரத்து 22 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 6031 பேர் உட்பட இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 96 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 7,418ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று 1,083 பேருக்கு உட்பட இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 697 பேர் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 577 பேருக்கும், சேலத்தில் 335 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**- கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *